மினி பஸ்சுக்குள் புகுந்து கண்டக்டர் மீது தாக்குதல்

மினி பஸ்சுக்குள் புகுந்து கண்டக்டர் மீது தாக்குதல்
பைல் படம்
நாகர்கோவிலில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் மினி பஸ் கண்டக்டரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சகாய ஜோஸ் (25). இவர் மினி பஸ்ஸில் கண்டக்டராக உள்ளார். பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக சகாய ஜோசுக்கும் மற்றொரு மினி பஸ் பணியாளர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வடசேரி அண்ணா ஸ்டேடியம் அருகே பயணிகளை ஏற்றுவதற்காக சகாய ஜோஸ் பணியாற்றும் மினி பஸ் நின்று கொண்டு இருந்தது. கண்டக்டர் சகாய ஜோஸ் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பிகளுடன் பஸ்சில் புகுந்து சகாய ஜோசை தாக்கினர். பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து சகாய ஜோஸ் வடசேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இறச்சகுளத்தை சேர்ந்த கமல்ராஜ், மேக்காமண்டபம் பிரகலாதன் (32) அருகு விளை அபினேஷ் ( 27) மற்றும் மகேஷ், கோவிந்தன் உட்பட ஆறு பேர் பல்வேறு பிரிவுகள் வழக்கு பகுதி செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story