இரவு காவலர்கள் மீது தாக்குதல் : இருவர் படுகாயம்

இரவு காவலர்கள் மீது தாக்குதல் : இருவர் படுகாயம்

தாக்குதல் 

புதுக்கோட்டை மாவட்டம், நவம்பட்டி அருகே டாஸ்மாக் இரவு காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலுப்பூர் அருகே நவம்பட்டி டாஸ்மாக் கடையில் இரவு காவலராக சண்முகம் மற்றும் பழனி ஆகியோர் உள்ளனர்.நேற்று ஒரு காரில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 பேர் இரவு காவலர்களிடம் மது பானத்தை எடுத்துதர கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கடை அடைக்கப்பட்டு விட்டது என கூறியுள்ளனர்.

இதற்கு 3 பேரும் சேர்ந்து இரவு காவலர்கள் சண்முகம் மற்றும் பழனியை ஆகியோரை தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story