தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் தாக்குதல்

தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் தாக்குதல்

தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அதிமுக சார்பில் திறக்கப்பட்டபோது ஏற்பட்ட தகராற்றால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அதிமுக சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நீர், மோர் பந்தல் திறக்கும் விழா அதிமுக துணை பொது செயலாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நத்தம் விஸ்வநாதன் தனது காரில் புறப்பட்ட போது அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன் காரை முற்றுகையிட்டு ஒருவரை ஒருவர் குறை கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் தகாத வார்த்தைகளை கூறிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story