நாகர்கோவிலில் பூசாரி மீது தாக்குதல்

நாகர்கோவிலில் பூசாரி மீது தாக்குதல்
பைல் படம்
முன்விரோதம் காரணமாக நாகர்கோவிலில் கோயில் பூசாரியை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் முத்து விஜயன் (21). இவருக்கும் கோட்டாறு கணேசபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், அகிலன், பிரவீன், பார்த்திபன், அஸ்வின் ஆகியோருக்கும் இடையே விளையாடிய போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முத்து விஜயன் என்வியை தெருவில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை வைப்பது வழக்கம். அதே போல் சம்பவத்தன்று கோவிலில் பூஜை செய்துவிட்டு வீடு திரும்பி இருக்கிறார். அப்போது விக்னேஷ் உட்பட ஐந்து பேரும் சேர்ந்து முத்து விஜனை கல்லால் தாக்கியதுடன் அவரது பைக்கை சேதப்படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் முத்து விஜயனுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கோட்டாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விக்னேஷ், அகிலன், பிரவீன், பார்த்திபன், அஸ்வின் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story