பைக் சத்தம் எழுப்பியதை தட்டி கேட்ட விவசாயி மீது தாக்குதல்

பைக் சத்தம் எழுப்பியதை தட்டி கேட்ட விவசாயி மீது தாக்குதல்

மார்த்தாண்டம் அருகே பைக்கில் அதிக சத்தம் எழுப்பியதை தட்டிக் கேட்ட விவசாயியை தாக்கிய 9 பேர் மீது வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.

மார்த்தாண்டம் அருகே பைக்கில் அதிக சத்தம் எழுப்பியதை தட்டிக் கேட்ட விவசாயியை தாக்கிய 9 பேர் மீது வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி ஏரியன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் .விவசாயி.இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிஜோ என்பவருக்கும் பைக் சத்தம் எழுப்பியதை தட்டி கேட்டது தொடர்பாக பிரச்னை இருந்து வந்து உள்ளது. இந்த நிலையில், சிஜோ தனது நண்பர்கள் செல்மோன், டினோ உள் பட 9 பேர் சேர்ந்து ஆபிரகாமை சரமாரியாக தாக்கி உள்ளார்.

ஆபிரகாமின் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதை கண்ட கும்பல் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்று உள்ளது. இதை அடுத்து அவர்கள் படுகாயம் அடைந்த ஆபிரகாமை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் போலீசார் சிஜோ உள்பட 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான நபர்களைத் தேடி வருகின்றனர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story