சாதியை கூறி தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு

சாதியை கூறி தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு
காவல் நிலையம்
விருதுநகரில் இளைஞரை சாதியை கூறி திட்டி தாக்குதல் நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் வயது 28 .இவர் தனது இருசக்கர வாகனத்தில் பர்மா காலனியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது பாத்திமா நகர் அருகே பாத்திமா நகரைச் சார்ந்த ஜெய் சூர்யா என்பவர் ஜாதி பெயரை கூறி அவரை பேசியதாகவும் ஏன் ஜாதி பெயரை குறிப்பிட்டு கூறுகிறீர்கள் என அருண்குமார் கேட்டதற்கு தனது நண்பர்கள் மீது கொடுத்த பி சி ஆர் வழக்கை திரும்ப பெற வேண்டும் என ஜெயசூர்யா வற்புறுத்தியதாகவும் அதற்கு அருண்குமார் வழக்கை வாபஸ் வர முடியாது வழக்கு நடக்கட்டும் என கூறியதாகவும் இதனால் ஆத்திரமடைந்தார் ஜெயசூர்யா மற்றும் அவருடைய நண்பர் அல்லம்பட்டியைச் சார்ந்த சிவா ஆகிய இருவரும் அருண்குமாரை தாக்கியுள்ளனர்.

இதை தடுக்க வந்த அருண்குமாரின் உறவினர் முத்து என்பவரையும் ஜெயசூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிவா, ஜெயசூர்யாவின் தந்தை முருகன், சந்தனமாரி, ரம்யா மற்றும் இரண்டு பேர் என மொத்தம் ஏழு நபர்கள் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயப்படுத்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து கூறிய நடவடிக்கை எடுக்க அருண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story