அசுத்தம் செய்தவரை தட்டி கேட்டவர்கள் மீது தாக்குதல்

அசுத்தம் செய்தவரை தட்டி கேட்டவர்கள் மீது தாக்குதல்

தாக்குதல்

சாணார்பட்டி அருகேயுள்ள பெத்தயகவுண்டன்பட்டியில் குடியிருப்பு பகுதியில் அசுத்தம் செய்தவரை தட்டி கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்த சாணார்பட்டி காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள பெத்தயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 36),வெல்டிங் தொழிலாளி இவரும் இவரது தாயார் சூடாமணி( வயது 60) இவர்கள் இருவரும் தங்கள் வீட்டு முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 26), என்பவர் மதுபோதையில் பாக்கியராஜின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்துள்ளார். இதுகுறித்து பாக்கியராஜ்,சூடாமணி அவரை கண்டிக்கவே ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் அவர்களை தெருவில் சிறுநீர் கழித்தால் உங்களுக்கு என்ன எனக்கூறி அவதூறாக பேசி மேலும் அங்கிருந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து பாக்கியராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் சாணார்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வேலுமணி வழக்குபதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story