கொல்லங்கோட்டில் வியாபாரி மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு.

கொல்லங்கோட்டில் வியாபாரி மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு.
பைல் படம்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால், கருக்குழி பகுதியை சேர்ந்தவர் சத்யநேசன் (42). வியாபாரியான இவருக்கும் இவரது வீட்டு அருகே வசிக்கும் மரிய பென்சீகர் (56) என்பவருக்கும் வழிப் பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சத்தியநேசன் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும் போது, கருக்குழி பகுதி சாலையில் வைத்து மரிய பென்சீகர் மற்றும் லிபின் சந்திரன் (40), ஊரம்பு பகுதியைச் சேர்ந்த அபிஷாந்த் மேலும் கண்டால் தெரியும் ஒருவர் என 4 பேர் சேர்ந்து சத்திய நேசனை கீழே தள்ளி, கல்லால் தாக்கி இரத்த காயம் ஏற்படுத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சத்தியநேசன் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமான புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, லிபின் சந்திரனை கைது செய்தனர்.

Tags

Next Story