விவசாய கிணறு உரிமையாளருக்கு தர்ம அடி

விவசாய கிணறு உரிமையாளருக்கு தர்ம அடி

தகராறு

திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபாடி பகுதியில் விவசாய கிணறு உரிமையாளர்‌ மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 40. விவசாயியான இவருக்கு சென்னை -- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கூளூர் பகுதியில் விவசாய கிணறு மற்றும் 1 ஏக்கர் நிலம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் விவசாய நிலத்தை பார்க்க வந்தார்.

அப்போது கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்த 10 பேரை எழுந்து செல்லுங்கள் என்றார். இதனால், ஆத்திரமடைந்தவர்கள் கோவிந்தராஜை ஆபாசமாக திட்டியதோடு தாக்கினர். காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags

Next Story