சேலத்தில் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணை மீது தாக்குதல்

சேலத்தில் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணை மீது தாக்குதல்

வழக்குப்பதிவு

சேலத்தில் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணை மீது தாக்குதல். கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பொன்னரசி (வயது25). இவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த மனுவில், கந்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அதேநிறுவனத்தில் வேலை பார்த்த மனோஜ்பிரதாப் என்பவரும், நானும் காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி திருமணம் செய்து கொண்டோம். இருவரும் சூரமங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். சில மாதங்களுக்கு முன்பு எனது கணவர் என்னை விட்டு பிரிந்து அவருடைய பெற்றோருக்கு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் சம்பவத்தன்று நான் வசிக்கும் வீட்டிற்கு மனோஜ்பிரதாப் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து ரூ.20 லட்சம், 100 பவுன் நகைகள் வரதட்சணையாக வாங்கி வரும்படியும், எனது சாதி பெயரை கூறியும் தாக்கினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் மனோஜ் பிரதாப் உள்பட 6 பேர் மீது போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story