சிவகாசி அருகே பார் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் தலைமறைவு - போலீஸார் விசாரணை

சிவகாசி அருகே பார் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் தலைமறைவு - போலீஸார் விசாரணை

போலீஸார் விசாரணை

சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பார் ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு. தலைமறைவானர்களை தேடி வரும் காவல்துறையினர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் தனியார் பார் ஊழியர் மீது சரமரியாக தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சிவகாசி அருகே திருத்தங்கல் - செங்கமலநாச்சியார்புரம் சாலையில் தனியார் பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் திருத்தங்கல் மாரிமணியார் சந்து பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மாரீஸ்வரன் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இந்த பார்க்கு வந்த சில வாலிபர்கள் மது அருந்திவிட்டு மாரீஸ்வரனிடம் தகராறு செய்து சரமரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து மாரீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் தேவராஜ் காலனியை சேர்ந்த ராஜா மகன் கணேசன் (22) திருவள்ளுவர் காலனியை சேர்ந்த பாலகுரு மகன் பொன்ராஜ் (23) பள்ளபட்டியை சேர்ந்த கனி மகன் மகேஸ்வரன் (21 ) மாரிமுத்து மகன் வெங்கடேஸ்வரன் (21) ஆகிய 4 பேர் மீதும் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story