பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

பைல் படம்

கழுகுமலை அருகே முன்விரோதம் காரணமாக பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள முக்கூட்டுமலை வடக்கு காலனியை தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(60). பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, நாரணாபுரம் ரோடு, போஸ் காலனியை சேர்ந்த கணேசன் மகன் மாரிபாண்டிகுமார் (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக முன்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிவராத்திரியை முன்னிட்டு அங்குள்ள சிவன் கோவிலில் கனகராஜ் மற்றும் தொழிலாளர்கள் பந்தல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாரிபாண்டிகுமார், கனகராஜீடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றியதில் மாரிபாண்டிகுமார் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் கனகராஜை சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றார்.

காயமடைந்த கனகராஜை அவரது உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கனகராஜ் கொடுத்த புகாரின்பேரில் கழுகுமலை சப்- இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து மாரிபாண்டிகுமாரை கைது செய்தார்.

Tags

Next Story