பெண்களை தாக்கியவர் கைது

பெண்களை தாக்கியவர் கைது

காவல் நிலையம்

நரிக்குறவ பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் கலா. இவர் வீட்டின் அருகே இட்லி கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அன்னை தெரசா நகர் நரிக்குறவர் குடிசை பகுதியைச் சேர்ந்த ரவி மனைவி லட்சுமி, 35; ஸ்ரீதேவி உள்ளிட்ட சிலர் சாப்பிட்டனர். சாப்பிட்ட இலையை அருகே உள்ள இடத்தில் போட சென்றபோது, அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த அன்பழகன், 58; நரிக்குறவர்களிடம் தகராறு செய்து, ஆபாசமாக திட்டி, பிரம்பால் தாக்கியுள்ளார். உளுந்துார்பேட்டை போலீசார் அன்பழகனை கைது செய்தனர்.

Tags

Next Story