வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் - 6 பேர் கைது

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் - 6 பேர் கைது

கைது

திருவள்ளூர் மாவட்டம் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் 6 பேர் கைது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த வயலாநல்லுாரைச் சேர்ந்தவர் தாஸ் மகன் பென்னி, 24. இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள சொக்காநல்லுார் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரண்டு கே.டி.எம்.டியூக் இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் வேகமாக பென்னி மீது மோதுவது போல் வந்தனர். இதை பென்னி தட்டி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆறு பேரும் பென்னியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து பென்னி கொடுத்த புகாரின்படி வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் மேல்மண்பேடு பகுதியைச் சேர்ந்த மோகேஷ், 20, தியாகராஜன், 18, சஞ்சய், 24 மற்றும் 17 வயது சிறுவர்கள் மூவர் என தெரியவந்தது. ஆறு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story