மனைவியை கொல்ல முயற்சி- சிவசேனா பிரமுகர் மீது வழக்கு.

மனைவியை கொல்ல முயற்சி- சிவசேனா பிரமுகர் மீது வழக்கு.
பைல் படம்
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குமரி மாவட்டம் படந்தாலுமூடு, மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் சைலஜா. இவரது இரண்டாவது மகள் ஸ்ரீ ரஞ்சனி (23). இவருக்கும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சிவசேனா பிரமுகர் ஒருவருக்கும் கடந்த 25 .6 .2020 -ல் திருமணம் நடைபெற்றது. அப்போது வரதட்சணையாக 15 சவரன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார். தற்போது இரு குழந்தைகள் உள்ளன. ஸ்ரீ ரஞ்சனியை அதிக வரதட்சனை கேட்டு தினமும் சிவசேன பிரமுகர் மற்றும் அவரது பெற்றோரும் சேர்ந்து தொந்தரவு செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட ஸ்ரீ ரஞ்சனி ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். அவரது தாயார் சைலஜா சம்பவம் அறிந்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் உணவில் விஷம் கலந்து இருப்பதை உறுதி செய்தனர்.

தற்போது சிகிச்சை முடிந்து தாயாரின் வீட்டிலிருக்கிறார். இந்த நிலையில் சிவரஞ்சனியிடம் சிவசேனா பிரமுகர் தகராறு செய்து, குழந்தையை காரில் கடத்தி சென்றதுடன், 2 லட்சம் தந்தால் குழந்தையை தருவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து குழந்தையை மீட்டு தர வேண்டும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை வேண்டும் என்று கேட்டு இளம்பெண் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருந்த நிலையில் சிவசேனா பிரமுகர் தலைமறைவானர். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story