வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி

வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி

போலீசார் வழக்கு 

திருப்புவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள வன்னிகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன், மகன் தமிழரசு. இவரது வீட்டில் யாரும் இல்லாத சமயம் வீட்டின் முன் பக்க கிரில் மற்றும் மர கதவை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்டீல் பீரோவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். பின்னர் ஆட்கள் நடமாட்டத்தை கண்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து வீட்டின் உரிமையாளர் தமிழரசு அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story