சிபிசிஎல் எல்லை அளவிடும் பணிகளை தடுக்க முயற்சி: விவசாயிகள் கைது

சிபிசிஎல் எல்லை அளவிடும் பணிகளை தடுக்க முயற்சி: விவசாயிகள் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நாகை மாவட்டம் பனங்குடி சிபிசிஎல் நிறுவன எல்லை அளவிடும் பணிகளை தடுக்க முயற்சித்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம் பனங்குடி சிபிசிஎல் நிறுவன எல்லை அளவிடும் பணிகளை தடுக்க முயற்சித்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சி.பி.சி.எல் ஆலை உள்ளது.

இந்த ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம்,முட்டம்,நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்திய நிலத்திற்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீடு வழங்காமல் சி.பி.சி.எல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள்,

விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 11-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கச்சா எண்ணெய்யை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்திற்காக நாகை,திருவாரூர்,தஞ்சை,உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று நாகப்பட்டினம் வருவாய்த் துறையினர் நிலம் அளவீடு பணியை ரவிச்சந்திரன்,

கார்த்தி, ரமேஷ்குமார், சக்கரவர்த்தி உள்ளிட்ட 4 தாசில்தார்கள் தலைமையில் வருவாய் துறையினர் 4 குழுக்களாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் அளக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 4 வட்டாட்சியர்களுடன் வட்ட துணை ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள் என 48 அரசு ஊழியர்கள் அளக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் நேற்று 90 சதவீதம் நில அளவீடு பணிகள் முடிவுற்றிருந்தது நிலையில் மீதமுள்ள பகுதிகளுக்கு எல்லை கல் பதிக்கும் பணிகளை தொடங்கினர்.இந்த நிலையில் ஆத்திரமடைந்த நரிமணம்,வெள்ளப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எல்லை கல் பதிக்கும் பணியினை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயச்சந்திரன்,மகேஸ்வரி, துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கலைந்து செல்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் விவசாயிகள் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்களை கைது செய்து மூன்று வாகனங்களில் நாகூர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.அதேபோல் பி.பனங்குடி பகுதியில் அளவீடு செய்து போடப்பட்டு இருந்த எல்லைக்கல்களை பிடுங்கி எரிந்து போராட்டம் நடத்திய 30 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு நாகூர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Tags

Next Story