கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

திலீப்,கௌரிசங்கர்

மேட்டுப்பாளையத்தில் முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த இருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் திலீப் (19) மற்றும் மருதாச்சலம் என்பவரின் மகன் கௌரிசங்கர் (21) ஆகிய இரண்டு நபர்கள் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்படி நபர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டும்ப்பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.‌இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 20 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story