கொலை முயற்சி வழக்கு - இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்கு - இருவர் குண்டர் சட்டத்தில் கைது

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 31.03.2024 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாயர்புரம் தேரிரோடு விலக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பேரூர் தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தில் பெருமாள் மகன் மருது (எ) மருதுபாண்டி (29) என்பவரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கடந்த 05.04.2024 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் ரோடு ஓடை பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முறப்பநாடு பக்கப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் அருண்குமார் (24) என்பவரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்கண்ட வழக்குகளில் கைதான மருது (எ) மருதுபாண்டி மற்றும் அருண்குமார் ஆகிய 2 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story