முன்விரோதத்தில் கொலை முயற்சி - சகோதர்கள் கைது

ஜெயங்கொண்டம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர், ஏப்.23- ஜெயங்கொண்டம் அடுத்து கல்லாத்தூர் அருகே தண்டலை மருக்காலங்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சூர்யா (24) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் விஜயராகவன் (26) என்பவருக்கும் சென்ற ஆண்டு திருவிழா நிகழ்வின் போது ஏற்பட்ட தகராறு முன் விரோதம் காரணமாக இந்த ஆண்டு திருவிழாவின் போது முன் விரோதத்தை மனதில் வைத்த விஜயராகவன். சூர்யாவை பழிதீர்க்க விஜயராகவன் மற்றும் அவரது சகோதரர் பரமேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து சூர்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி சூரி கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்துள்ளனர்.

காயமடைந்த சூர்யா ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சூர்யா ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விஜயராகவன் (26) பரமேஸ்வரன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story