மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பலாத்கார முயற்சி

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பலாத்கார முயற்சி
காவல் நிலையம் 
வீரகனூர் அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை, வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரகனூர் அருகே நடுவலூரைச் சேர்ந்த21 வயதான இளம்பெண், வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு மனநிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது பெற்றோர் இறந்து விட்டதால், தற்போது அக்கா வீட்டில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம், அந்த பெண்ணின் வீட்டில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே ஓடியுள்ளார். இதை கண்ட உறவுக்கார பெண் , வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மனநிலை பாதித்த இளம் பெண், அரை நிர்வாண கோலத்தில் இருந்தார். அவர் அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததால், அந்த வாலிபரை பொதுமக்கள் துரத்தி சென்றனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் அக்காவுக்கு தெரிவித்துள்வார். அவர் வந்து தங்கையிடம் விசாரித்த போது, சைகை மொழியில் மார்பு மற்றும் அந்தரங்க உறுப்பு வலிப்பதாக தெரிவித்தார் இதையடுத்து, அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, ஆத்தூர் மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி, வீரகனூர் எஸ்ஐ சிவகுருநா தன் விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அதே பகுதியைச் சேர்ந்த சிவா (33) என்பது தெரிய வந்தது.

இதனிடையே, அவர் வீட்டிலிருந்து ஓடிய போது, பொதுமக்கள் துரத்தியதால் கீழே விழுந்து படுகாயமடைந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து, சிவா மீது போலீசார் பலாத்கார முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரை போலீஸ் கண்காணிப்பில் வைத்துள்ளனர். சிவாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதும் தெரியவந்தது. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை வாலிபர், பலாத்காரம் செய்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story