நகை கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி !

நகை கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி !

கொள்ளை 

கொல்லங்கோடு அருகே அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்மநபர்கள் லாக்கர் அலாரம் சத்தம் கேட்டதும் தப்பி ஓட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மடத்துவிளாகம் வீட்டை சேர்ந்தவர் மனோகரன்.இவர் தனது வீட்டின் அருகே நகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.அதிகாலை 3 மணி அளவில் கடையில் அலாரம் சத்தம் கேட்டதும், தூக்கம் விழித்து சென்று பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதை அடுத்து அங்கிருந்த சி.சி. டி.வி., கேமரா பதிவை பார்த்த போது, 3 மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்ற போது லாக்கர் அலாரம் ஓசை எழுப்பியதால் தப்பி ஓடுவது தெரிந்தது. இது குறித்து, சி.சி.டி.வி பதிவுகளுடன் மனோகரன் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story