கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சி!

கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சி!

போலீசார்

தூசியில் நகைக்கடை உரிமையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் அரசமரத் தெருவை சேர்ந்தவர் நாராயண்லால் (வயது 31). இவர் செய்யாறு- காஞ்சீபுரம் சாலையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். அப்போது காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவது போல் பேச்சு கொடுத்து மிளகாய் பொடியை நாராயண்லால் மீது தூவி விட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். நாராயண்லாலின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.இதனையடுத்து மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர்.இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tags

Next Story