இலங்கைக்கு கடத்த முயற்சி - 2 டன் இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயற்சி - 2 டன் இஞ்சி பறிமுதல்

பைல் படம் 

மண்டபம் அருகே இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த 2000 கிலோ இஞ்சியை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்துவதற்காக சில மூட்டைகளில் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக மண்டபம் சுங்கத் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து விரைந்துசென்ற சுங்கத்துறையினர் இலங்கைக்குக்கு கடத்துவதற்காக படகில் ஏற்ற கடற்கரையில் தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2000 கிலோ (60 Packing) இஞ்சியை கைப்பற்றி மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றதுடன், இந்த கடத்தல் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story