நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி

நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி

திருட்டு முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் ஒரே இரவில் நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடைபெற்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கடைவீதியில் வெள்ளிக்கிழமை இரவு நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. இதனால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரத்தநாட்டில் தஞ்சை - பட்டுக்கோட்டை முதன்மை சாலையில், சந்தைப்பேட்டை எதிரே மூன்று மளிகை கடைகள் உள்ளிட்ட நான்கு கடைகளில் வெள்ளிக்கிழமை இரவு பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது. ஆனால் உள்பூட்டை உடைக்க முடியாததால் திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர் .

சனிக்கிழமை காலை கடை திறப்பதற்காக வந்த கடைக்காரர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு காவல்துறையினர் வந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து செல்ல வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story