ஆத்தூர் - 3வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

ஆத்தூர் - 3வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் 

3வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும், 2024 மக்களவை தேர்தல் பணிக மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்க வேண்டும், உங்கள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டாச்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story