திருவள்ளூரில் காவல் துறை வாகனங்கள் ஏலம்

திருவள்ளூரில் காவல் துறை வாகனங்கள் ஏலம்

வாகன ஏலம் 

திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கு சம்பந்தமான 14 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆறு நான்கு சக்கர வாகனங்கள் என 20 வாகனங்கள் வரும் 29ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஜன.29காலை 10:00 மணியளவில் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானம் அருகே ஏலம் நடைபெறும். வாகனங்களை ஏலம் கேட்க விரும்புகிறவர்கள் இரு சக்கர வாகனங்களுக்கு 1,000 ரூபாய் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய் முன்வைப்பு கட்டண தொகையாக செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ளவும். டோக்கன் அன்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை வழங்கப்படும். ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் அரசு விற்பனை வரியாக இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதமும், நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதமும் செலுத்த வேண்டும். வாகனத்தின் விபரம் மற்றும் குறைந்தபட்ச தொகை மாவட்ட எஸ்.பி. அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது என, எஸ்.பி., சீபாஸ் கல்யாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story