குழந்தைகளை கடத்தல் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ

குழந்தைகளை கடத்தல் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ

இன்ஸ்பெக்டர் பாபு

குழந்தைகளை கடத்தல் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோவால் மரக்காணத்தில் பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை மூன்று குழந்தைகள் காணாமல் சென்றுள்ளதாகவும் குழந்தைகளை பள்ளிக்குச் சென்று வரும்போது கடத்தி செல்வதாகவும் மரக்காணம் பகுதியில் சமூகவலைகளில் ஆடியோ ஒன்று வைரலாகி பரவி வருகிறது. இந்த ஆடியோவால் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் மேலும் அனைவராலும் இந்த ஆடியோ பகிரப்பட்டு வருவதால் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பரபரப்பு நிலவு வருகிறது இது சம்பந்தமாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுவிடம் கேட்டபோது மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை குழந்தைகள் காணவில்லை என்பது தொடர்பாக இதுவரை எந்த புகார்களும் வர பெறவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தவறான தகவலை பதிவிட்டு ஆடியோ வெளியீடு செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது கடுமையாக எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story