பெரம்பலூரில் ஆட்டோ சங்க கிளை கூட்டம்

பெரம்பலூரில் ஆட்டோ சங்க கிளை கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

பெரம்பலூரில் ஆட்டோ சங்க கிளை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான ஓட்டுநர்கள் சங்கம் சிஐடியு-சார்பில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க கிளை கூட்டம் கிளை தலைவர் சந்திரன் தலைமையில் துறைமங்கலம் சி ஐ டி யு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கிளைச் செயலாளர் கார்த்திகேயன், கிளை பொருளாளர் பரமசிவம், ராஜேந்திரன், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறக் கூடிய அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி சிஐடியூ மாவட்ட செயலாளர் அகஸ்டின் விளக்க உரையாற்றினார். சங்க மாவட்ட நிர்வாகி தீனதயாளன் சங்கர் மாவட்ட பொருளாளர் இன்பராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் பிப்ரவரி 16 நடைபெறக் கூடிய அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதும் ஆட்டோ ஓட்டாமல் நிறுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் கவுல் பாளையம் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு அமைத்துள்ள சிஐடியு சங்க தகவல் பலகை கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , வெளிமாவட்ட ஆட்டோ ஓட்டியதை தடுத்த சிஐடியூ ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து பொய் புகார் அளித்த முருகையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story