இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி வாலிபர் படுகாயம்

இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி வாலிபர் படுகாயம்

  புலியூர்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

புலியூர்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
களியல் தைக்காபள்ளி பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். புலியூர்குறிச்சி அருகே செல்லும் போது பின்னால் வந்து கொண்டிருந்த நான்கு சக்கர குட்டியானை ஆட்டோ திடீரென இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அப்துல் ரகுமானை பொதுமக்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து தக்கலை காவல் நிலைய பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் கோமதி சங்கர் விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து தலைமறைவான நான்கு சக்கர ஆட்டோ மற்றும் டிரைவரை தேடி வருகின்றார்.

Tags

Next Story