ஆட்டோ கவிழ்ந்து விபத்து : டிரைவர் பலி

ஆட்டோ கவிழ்ந்து விபத்து : டிரைவர் பலி

பைல் படம்

கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்தார்.
தென்காசி அருகே ஓடக்கரைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி மகன் ராமசந்திரன் (29). இவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் அருகே வானரமுட்டியில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு ஆட்டோவில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ராமசந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் வழக்குப பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story