ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பாஜக நகரம் சார்பில் மே 1 தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி 500 நாட்கள் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் விதமாக மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாஜக பல்லடம் நகரம் சார்பாக செட்டிபாளையம் ரோடு பிரிவில் இரண்டாவது ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை கௌரவப்படுத்தி ஆடைகள் இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்லடம் நகரத் தலைவர் வடிவேலன் தலைமை வகித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் கே ஆர் மணி, தினேஷ் குமார், செல்வராஜ், பன்னீர்செல்வம், ரமேஷ் குமார், தேவராஜ் மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...

Tags

Next Story