நீட்டிற்கு எதிராக கையெழுத்து பெறும் நிகழ்ச்சி!

நீட்டிற்கு எதிராக கையெழுத்து பெறும் நிகழ்ச்சி!

நீட் தேர்வு எதிரான கையெழுத்து பெறல்

நீட்டிற்கு எதிராக கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் செய்யாறு தொகுதிக்குட்பட்ட திமுக இளைஞரணி சார்பில் நீட் விளக்கு நம் இலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி அருகில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக தங்களது கையொப்பத்தை பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர்கள், நகர இளைஞரணி அமைப்பாளர்கள், உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story