கூட்டு சாலை சந்திப்பில் தானியங்கி சிக்னல் தேவை என கோரிக்கை

கூட்டு சாலை சந்திப்பில் தானியங்கி சிக்னல் தேவை என கோரிக்கை

தானியங்கி சிக்னல்

சென்னை பூந்தமல்லியில் கூட்டு சாலை சந்திப்பில் தானியங்கி சிக்னல் தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லியில் குன்றத்துார், போரூர், குமணன்சாவடி, மலையம்பாக்கம் ஆகிய நான்கு சாலை இணையும் சந்திப்பு பகுதி, கொல்லச்சேரியில் உள்ளது. இந்த சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தானியங்கி சிக்னல் இல்லை. போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை. இதனால் வாகன ஓட்டிகள், தங்கள் விருப்பப்படி செல்வதால், மாணவர்கள், பொதுமக்கள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இங்கு, தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story