அவரைக்காய் விலை கடும் உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

அவரைக்காய் விலை கடும் உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

பைல் படம்

ஆலங்குளத்தில் அவரைக்காய் விலை கடும் உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட காய்கனி சந்தைகளுக்கு அவரைக்காய் வரத்து குறைந்துள்ளது. இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ நாட்டு அவரைக்காய் ரூ.125ஆக உயர்ந்துள்ளது.சில்லறை விற்பனையில் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுபோல் தக்காளி விலையும் கிலோ 50 ரூபாய்க்கு தாண்டி விட்டது.விளைச்சல் வரத்து குறைவு காரணமாக விலை உயர்வதாக வியாபாரிகள் கூறினர். இதனால் அவரைக்காய் கடும் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story