கல்லூரியில் பரிசளிப்பு விழா

கல்லூரியில் பரிசளிப்பு விழா

திண்டிவனம் நேஷனல் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது. 

திண்டிவனம் நேஷனல் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டிவனம் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியும், மாணவிகளுக்கான எறிபந்து போட்டியும் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர் ஜெயசசங்கீதா அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீவச்சன், நல்லாசிரியர் குமார தேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், கைப்பந்து போட்டியில் 16 பள்ளிளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் சாரம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை யும், திண்டிவனம் நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், சிங்கனூர் ஆதி திராவிடர் நல மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இதே போல் 8 பள்ளிகள் கலந்து கொண்ட மாணவிகளுக்கான எறிபந்து போட்டியில் திண்டிவனம் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும், திண்டிவனம் நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தையும், கருவம்பாக்கம் திருவள்ளுவர் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

Tags

Next Story