கழுகுமலையில் பரத நாட்டிய மாணவிகளுக்கு விருது

கழுகுமலையில் பரத நாட்டிய மாணவிகளுக்கு விருது

விருது பெற்ற மாணவிகள்

தென்காசி மாவட்டம் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவேங்கடம், கழுகுமலை பள்ளி மாணவா், மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. கழுகுமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, நேத்ரா ரீகிட்ஸ் அண்ட் கல்சுரல் அகாதெமியைச் சோ்ந்த மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கழுகுமலை, திருவேங்கடம் பகுதியைச் சோ்ந்த மாணவிகள் பரதம் ஆடினா். இதைத் தொடா்ந்து பரதம் ஆடிய மாணவிகளுக்கு சா் சி.வி.ராமன் விருது மற்றும் ஆடல் வல்லான் அருள்பெற்ற மொட்டு, அரும்பு விருதுகள் வழங்கப்பட்டது. இதேபோல் பரத ஆசிரியா் மல்லிகாவுக்கு ‘ஆடல் வல்லான் அருள் பெற்ற நா்த்தகி’ என்ற விருது வழங்கப்பட்டது. விருதுகளை தொழிலதிபா் பழனி, ராதா பழனி, கழுகுமலை கோயில் நிா்வாக அதிகாரி காா்தீஸ்வரன் ஆகியோா் வழங்கினா்.

Tags

Next Story