நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு விருது

புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஸ்கோப் எமினென்ஸ் விருதை வழங்கினார்.

புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஸ்கோப் எமினென்ஸ் விருதை நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள், செயலாக்கத் துறை இயக்குநா் கே. மோகன் ரெட்டி, தலைமைப் பொது மேலாளா் டி. சாலமன் லூதா் கிங் ஆகியோரிடம் வழங்கினாா். தொடா்ந்து குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசுகையில் என்எல்சி இந்தியா நிறுவனம் எண்ம மாற்றத்துக்கான திட்டங்களை ஏற்று அதை செயல்படுத்துவதில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார்.



Tags

Next Story