ரெட்கிராஸ் சங்கம் சார்பில் ரத்ததானம் செய்தவர்களுக்கு விருது!

ரெட்கிராஸ் சங்கம் சார்பில் ரத்ததானம் செய்தவர்களுக்கு விருது!

ரத்ததானம் செய்வோர் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு ரெட் கிராஸ் சார்பில் விருது வழங்கப்பட்டது.


ரத்ததானம் செய்வோர் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு ரெட் கிராஸ் சார்பில் விருது வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் சார்பில், உலக ரத்த தானம் செய்வோர் தினத்தை முன்னிட்டு, ரத்ததானம் செய்தவர்களுக்கு சிறந்த ரத்ததானம் செய்தோர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ரத்த கொடையாளர்களுக்கன பாராட்டு நிகழ்ச்சி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

விழாவுக்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு வரவேற்றார். அவைத்துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், மருத்துவ குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 25 முறை ரத்ததானம் செய்த வழக்கறிஞர் கே.சங்கர், 20 முறை ரத்த தானம் செய்த டி.நேத்தாஜி, 12 முறை ரத்த தானம் செய்த ஜி.கனிமொழி மற்றும் எ.அசோக்குமார், எஸ்.நவீன், எஸ்.நன்மாறன், பி.என்.ராமச்சந்திரன் ஆகியோரை பாராட்டி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தி.கலியமூர்த்தி விருதுகள் வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story