விருதுநகரில் 60 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கல்

விருதுநகரில் 60 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கல்

மாணவிக்கு கேடயம் வழங்கல்

விருதுநகரில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கடந்த 36 ஆண்டு காலமாக கல்வித்திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நிறுவனரும் மாநில தலைவருமான கருப்பையா அவர்கள் தலைமையில் உயர் நீதிமன்ற பார்கவுன்சில் டெல்லி,

சென்னை, மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் தாளமுத்தரசு அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவ மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ்களையும வழங்கினார்.

மேலும் பன்னிரண்டாம் வகுப்பில் 550 மதிப்பெண்கள் மற்றும் பத்தாம் வகுப்பில் 460 மதிப்பெண்கள் பெற்ற 53 மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் வேலாண்டி, ராஜ பேகன், மாவட்ட அமைப்பாளர் சோனைமுத்து மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

Tags

Next Story