பாபநாசத்தில் 100%வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

பாபநாசத்தில் 100%வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்

பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் 100% விடுதலின்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி, 172.பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை சரகம், நெடுவாசல் வருவாய் கிராமம், அளவுக்காடு தெரு வடக்கு முஸ்லிம் தெரு பகுதிகளில் இன்று (03.04.2024) பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும்,

100% விடுதலின்றி வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையிலும், பாபநாசம் வட்டாட்சியர் அவர்களின் முன்னிலையிலும் ,வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று, தேர்தல் அழைப்பிதழ்கள் வழங்கியும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும். வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இதில் வருவாய் ஆய்வாளர், மற்றும் அம்மாபேட்டை சரகத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர் கலந்து கொண்டனர் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags

Next Story