தொழுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தொழுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தொழுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் மருத்துவ அலுவலர் மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தொழுநோய் மருத்துவர் புவனேஸ்வரி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ப்ரொஜெக்டர் மூலமாக தொழுநோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு படங்களை காண்பித்து இதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துக் கூறினார்.

மேலும் தொழுநோய் பாதிப்பால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் முறை அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி இயற்றப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story