சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு!

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

புதுக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா சாலை பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவவி. மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை சார்பில் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயஷங்கர் ஏற்பாட்டில் இன்று சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவவி.மெய்யநாதன்,மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா, மாவட்ட போக்குவரத்து அலுவார் ஜெயஷங்கர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் காவல் துறை வாகனம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனம்,தனியார் சுற்றுலா வாகனம், என 80 க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றனர் இந்த பேரணியில் சீட் பெல்ட் அணிவது நன்மை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கபட்டது

Tags

Next Story