சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

ராசிபுரம் வட்டார போக்குவரத்து சார்பில், ஆண்டகளூர்கேட் பகுதியில், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, ராசிபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஆய்வாளர் நித்தியா ஹெல்மெட் அணிவதன் அவசியம், மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பு, சாலை விதிகள் கடைபிடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, இருசக்கர வாகன ஓட்டியிடம் தலைகவசம் அணிவது குறித்தும், நான்கு சக்கர வாகனத்தில் வந்தவரிடம் சீட் பெல்ட் அணிவது குறித்தும் செயல்விளக்கம் அளித்தார். முன்னதாக, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், ராசிபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நடராஜன் , ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா, தலைமையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்போம், தலைகவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சாலைகளில் பயணிப்போம், செல்போன் பேசி கொண்டு வாகனத்தில் பயணிக்க மாட்டோம், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story