வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை குறித்து விழிப்புணர்வு

X
கள்ளகுறிச்சியில் வாக்களிப்பதின் முக்கியதுவம் குறித்து மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வாக்காளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலருடன் இருந்தனர்.
Next Story
