சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு  விழிப்புணர்வு

விழிப்புணர்வு 

நன்னிலம் நல்ல மாங்குடி தங்கம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வை வழங்கினர்.
எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலைய காவலர்கள் நன்னிலம் நல்ல மாங்குடி தங்கம் நடுநிலைப்பள்ளி மாணவர் மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . மேலும் இணையவழி விளையாட்டு மூலம் நடைபெறும் குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைத்தும், எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சைபர் கிரைம் சம்பந்தமாக சமூக வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story