கழிவு நீர் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழப்புணர்வு

கழிவு நீர் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழப்புணர்வு
மாரத்தான் போட்டி 
சிப்காட் பகுதி கழிவு நீர் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழப்புணர்வு ஏற்படுத்த பாஜக மராத்தன் போட்டி நடைபெற்றது.

பெருந்துறை சிப்காட் நச்சு கழிவு நீரால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் மார்ச் 3 ம் தேதி மராத்தான் நடத்த பெருந்துறை பாஜக திட்டமிட்டுள்ளது.

பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள குட்டபாளையத்தில் ஆரம்பிக்கும் மராத்தானது சிப்காட் மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு முன்பு நிறைவடைகிறது.

மேலும் 28.2.2024 முதல் பாதிக்கப்பட்ட அனைத்து பெருந்துறை சட்டமன்றத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளிலும் பெருந்துறை பாஜக சார்பில் திண்ணை பிரச்சாரம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் செய்யவுள்ள உள்ளதால் ஒலி பெருக்கி வைக்க அனுமதிக்கோரி பாஜக நகர செயலாளர் பூர்ணசந்திரன், ராயல் சரவணன் தலைமையிலான பாஜகவினர் பெருந்துறை காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story