பவ்டா கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

பவ்டா கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

பவ்டா கல்லூரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் சுதா கிருஷ்ட்டிகாய் தலைமை தாங்கினார், திண்டிவனம் தாசில்தார் சிவா முன்னிலை வகித்தார், துணை முதல்வர் சேகர் வரவேற்றார். இதில் விழுப்புரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தனி துணை ஆட்சியர் முகுந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வருகிற நாடாளுமன்ற தேர்த லில் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விளக்கி கூறி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகாமில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தனி தாசில்தார் தமிழ்ச்செல்வி, வருவாய் த்துறை ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் அமுல்ராஜ், விஸ்வநாதன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story