விழு‌ப்புர‌ம் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

விழு‌ப்புர‌ம் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

விழுப்புரம் வனத்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடை கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அறிவுறுத்தலின்படி சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் விழுப்புரம் வனத்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடை கால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஒசுடு பறவைகள் சரணாலயம் மற்றும் ஆரோவில் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வனச்சரகர்கள் முகாமை தொடங்கி வைத்தனர். ஒசுடு ஏரியில் உள்ள பறவைகளை மாணவ மாணவியர்கள் கண்டுகளித்தனர். பின்னர் ஆரோவில் தாவரவியல் பூங்காவில் வெப்ப மண்டல உலர் பசுமை மாறா காடுகள் பற்றியும், பூச்சி உண்ணும் தாவரங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேற்படி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள், தொப்பி, நோட்டு, பேனா, ஸ்டீல் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story