போதை இல்லா பாரதம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

போதை இல்லா பாரதம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

 விழிப்புணர்வு பிரசாரம்

வேடசந்தூர் ஆத்துமேட்டில் போதை இல்லா பாரதம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
வேடசந்தூர் ஆத்துமேட்டில் போதை இல்லா பாரதம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு போதை பொருட்களை தடை செய்துள்ளதாகவும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து அரசு வழங்கியுள்ள தொலைபேசி எண்கள் மூலம் புகார் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story